விமானத்தில் கழிவறையில் இறந்து கிடந்த பயணி! நடந்தது என்ன? பீதியில் உறைந்து போன சக பயணிகள்
எகிப்தில் இருந்து ரஷ்யா செல்லும் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமானத்தின், கழிவறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
S7 Airlines நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று எகிப்தில் உள்ள Sharm el-Sheikh-ல் இருந்து, ரஷ்யாவில் உள்ள Samara-வுக்கு பயணிகள் புறப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் 48 வயது மதிக்கத்தக்க Alexander Dokshin என்பவர் பயணம் செய்துள்ளார். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலே கழிவறைக்கு சென்ற Alexander Dokshin வெகுநேரமாக வெளியில் வராத காரணத்தினால், விமானம் அவசரமாக அருகில் இருந்த Cairo விமானநிலையத்தில் தரையிரக்கப்பட்டது.
இதற்கிடையில் விமான குழுவினர், விமானத்தின் கழிவறை கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்த போது, அவர் அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார்/ இதனால் விமானத்தில் இருந்த மருத்துவர் அவரை காப்பாற்ற போராடினர்.
அதன் பின் விமானம் தரையிரங்கிய பின்பு, அங்கிருந்த மருத்துவர்கள் அவரை காப்பாற்ற போராடியுள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டது. குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சுமார் 5 மணி நேர தாமதத்திற்கு பின்பு விமானம் புறப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த சகபயணி டாட்டியானா என்பவர் கூறுகையில், விமானத்தின் நடுவில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு மருத்துவர் தேவை என்று விமான குழுவினர் கூறிய போது, நான் பீதியடைந்தேன்.
திரும்பி பார்த்த போது, எனக்கு பின்னால் இருந்த பயணிகள் அனைவரும், ஒரு வித பயத்தில் இருப்பதை பார்த்தேன். விமானம் Cairo-வில் தரையிரங்கிய பின்பு, உடலை விமானத்தில் இருந்து இறக்கி, வேறொரு இடத்திற்கு மாற்றினர். அதன் பின் பொலிசார் விசாரணை என சுமார் 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
உயிரிழந்த நபரின் மனைவி கிறிஸ்டினா(37) மற்றும் மகள் ஆகியோர் மரணம் குறித்து விசாரிக்க ரஷ்ய தூதர் அழைக்கப்பட்டதாக கூறினார்.
S7 Airlines நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பயணி மயக்கமடைந்ததைக் அறிந்த விமான கேப்டன், உடனடியாக அருகிலுள்ள விமான நிலையமான Cairo-வில் அவசரமாக தரையிறங்க முடிவு செய்தார்.
விமானத்தில் இருந்த மூன்று மருத்துவர்கள், விமானம் தரையிரங்கும் வரை அவருடைய இதயத்திற்கு புத்தூயிர் கொடுத்தபடி இருந்தனர்.
விமானம் தரையிரங்கப்பட்டு, உள்ளூர் மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், துரதிரஷ்டவசமாக அவரை காப்பாற்ற முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.