வெளிவரும் பகீர் சம்பவம்... பயணிகள் பேருந்தை கடத்தி தீயிட்டு கொளுத்திய கும்பல்
வட அயர்லாந்தில் பயணிகள் பேருந்து ஒன்று கடத்தப்பட்டு, நால்வர் கும்பல் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் போது குறித்த பேருந்தில் சாரதி உடபட சிலர் பயணித்துள்ளதாகவும், அவர்களை அந்த கும்பல் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அயர்லாந்தின் Antrim மாவட்டம் Newtownabbey பகுதியிலேயே குறித்த பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஞாயிறன்று சுமார் 7.45 மணியளவில் இரட்டை அடுக்கு பயணிகள் பேருந்து ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட்டதாக அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு அவசர உதவிக்குழுவினர் விரைந்துள்ளனர். இந்த விவகராம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் தெரிவிக்கையில், சம்பவத்தின் போது நால்வல் கும்பல் பேருந்து பயணிகளை மிரட்டி வெளியேற்றியதாகவும், பின்னர் தீயிட்டு கொளுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் துரிதமாக செயல்பட்டு கொழுந்துவிட்டெரிந்த பேருந்தில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மேலும், அப்பகுதி மக்கள் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து விலகி இருக்க கோரப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், வடக்கு அயர்லாந்து நெறிமுறைக்கு எதிரான வெளிப்படையான எதிர்ப்பு இதுவென கூறப்படுகிறது. மேலும், கடந்த திங்கட்கிழமையும் பயணிகள் பேருந்து ஒன்று கடத்தப்பட்டு, இதேப்போன்று தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.
அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் பல பேர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இது அர்த்தமற்றது. இத்தகைய குற்றவியல் நடத்தை மரணம் அல்லது கடுமையான காயத்திற்கு வழிவகுக்கும் என DUP தலைவர் Jeffrey Donaldson தெரிவித்துள்ளார். வன்முறையால் அல்ல அரசியலால் நாட்டில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.