பிரித்தானியா விமானநிலையத்தில் மர்ம பொருள்! வெளியேற்றப்பட்ட பயணிகள்: முக்கிய தகவல்
பிரித்தானியாவில் மான்செஸ்டர் விமான நிலையத்தில் மர்ம பொருள் ஒன்று இருப்பதாக தகவல் கிடைதத்தையடுத்து பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.
பிரித்தானியாவின் Manchester விமானநிலையத்தில் இருக்கும் டெர்மினல் 2-வில் சந்தேகத்திற்கிடமான மர்ம பொருள் ஒன்று கிடப்பதாக இன்று சற்று முன்பு பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து உடனடியாக அங்கு விரைந்த பொலிசார், டெர்மினல் 2 பகுதியில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்களை உடனடியாக வெளியேற்றி வருகின்றனர்.
அதே சமயம் டெர்மினல் 1 மற்றும் 3 வழக்கம் போல் இயங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Manchester Airport's Terminal Two has been evacuated. Latest pictures from the scenehttps://t.co/eS7SGBnKlH pic.twitter.com/NM795NSaH7
— Manchester News MEN (@MENnewsdesk) October 19, 2021