சுவிஸ் நகரமொன்றில் வெடிவிபத்தில் சிறுமி காயமடைந்த விவகாரம்: புதிய கோணத்தில் திரும்பிய வழக்கு

Switzerland
By Balamanuvelan Nov 27, 2024 08:49 AM GMT
Report

சுவிஸ் நகரமொன்றில் வெடிவிபத்தில் சிறுமி ஒருத்தி காயமடைந்த விவகாரத்தில், வழக்கு புதிய கோணத்தில் திரும்பியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் வெடித்த பார்சல் வெடிகுண்டு

நேற்று மதியம், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள, Grange-Canal என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்த தபால் பெட்டி ஒன்றிலிருந்த பார்சல் வெடிகுண்டு ஒன்று வெடித்ததில், 12 வயது சிறுமி ஒருத்தி படுகாயமடைந்தாள்.

அவளது வயிற்றில் பல மணி நேர அறுவை சிகிச்சை நடந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.  

இதற்கிடையில், கோடையில், Saint-Jean எனுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும், இந்த பார்சல் வெடிகுண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். அந்த குண்டு வெடிப்பிலும் ஒருவர் காயமடைந்தார்.

காயமடைந்த அந்த நபரும் அதே வீட்டில் வாழும் வேறொரு நபரும் Patek Philippe என்னும் கைக்கடிகார தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள்.

அவர்கள் வேலை செய்யும் அந்த கைக்கடிகார தயாரிப்பு நிறுவனத்துக்கும் பல வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதால், இந்த சம்பவங்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என தாங்கள் கருதுவதாக பொலிசார் தெரிவித்திருந்தார்கள்.

புதிய கோணத்தில் திரும்பிய வழக்கு

இந்நிலையில், Patek Philippe கைக்கடிகார தயாரிப்பு நிறுவனம், தனது பணியாளர்களை அந்த வெடிவிபத்து தொடர்பில் எச்சரித்துள்ளது.

தொடர்ச்சியாக இரண்டு வெடிகுண்டு சம்பவங்கள் நிகழ்ந்து, அதில் இரண்டாவது சம்பவம் Patek Philippe நிறுவன ஊழியர்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டதுபோல் தோன்றுவதையடுத்து, அந்த நிறுவனம் தனது பணியாளர்களை கவனமாக இருக்குமாறு எச்சரித்துள்ளது.  

எதனால் Patek Philippe நிறுவன பணியாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது என்பது தெரியவில்லை. என்றாலும், அந்நிறுவனம் மீது கடந்த சில ஆண்டுகளாக துன்புறுத்தல் மற்றும் தொல்லைகொடுத்தல் புகார்கள் அளிக்கப்பட்டுவருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், தனது பணியாளர்கள் மீதான தாக்குதல் குறித்து Patek Philippe நிறுவன நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், தங்கள் பணியாளர்களின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில், பெடரல் அதிகாரிகள் அந்த விடயம் தொடர்பான விசாரணையை கையில் எடுத்துள்ளார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US