இலங்கை வீரர் பதும் நிசங்காவிற்கு கொரோனா தொற்று உறுதி! பாதி போட்டியில் வெளியேற்றம்
காலே டெஸ்டில் விளையாடி வரும் இலங்கை வீரர் பதும் நிசங்காவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா-இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன.
இரு அணிகளும் முதல் இன்னிங்சை முடித்த நிலையில், அவுஸ்திரேலிய அணி 190 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
முன்னதாக, நேற்று காலை இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிசங்கா உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அவருக்கு ஆன்டிஜென் சோதனை நடத்தப்பட்டது.
? Team Updates:
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 11, 2022
Pathum Nissanka has tested positive for Covid-19.
He was found to be positive during an Antigen test conducted on the player yesterday morning, following the player complaining of feeling unwell. #SLvAUS pic.twitter.com/NwTdTLOVFZ
அப்போது அவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். தற்போது அவர் வேறொரு ஹொட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும், அவர் கோவிட்-19 நெறிமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிசங்காவிற்கு பதிலாக மாற்று வீரராக ஒஷாட பெர்னாண்டோ களமிறக்கப்படுவார் என்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, முதல் டெஸ்ட் போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதி போட்டியிலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.