பிரித்தானியா மருத்துவமனையில் படுக்கைக்காக நோயாளிகள் காத்துக்கிடக்கும் அவலம்! மருத்துவர் வேதனை
பிரித்தானியாவின் நியூகேஸிலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் படுக்கைக்காக 8 அல்லது 9 மணிநேரம் காத்துக்கிடப்பதாக மருத்துவர் வேதனை தெரிவித்துள்ளார்.
நியூகேஸில் உள்ள ராயல் விக்டோரியா மருத்துவமனையில் (ஆர்விஐ) இச்சூழல் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அதேசமயம்,கொரோனா மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக நோயாளிகள் பலர் அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் போனதே தற்போதைய அழுத்தங்களுக்கு காரணம் என கூறப்படுகிறது.
நியூகேஸில் மருத்துவமனை அறக்கட்டளையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் Chris Gibbons கூறியதாவது, தற்போதைய நோயாளிகளின் அனுமதி எண்ணிக்கை மோசமான குளிர்காலத்தில் நாம் பார்த்ததை விட அதிகமாக உள்ளது.
நியூகேஸில் ஆர்விஐ அவசர சிகிச்சை பிரிவில் தற்போதைய நிலைமை மோசாமாக உள்ளது.
படுக்கைகளுக்காக நோயாளிகள் எட்டு அல்லது ஒன்பது மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
சில சந்தர்ப்பங்களில், நோயாளிகள் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்த பிறகு நான்கு, ஐந்து அல்லது ஆறு மணிநேரம் மட்டுமே சிகிச்சை பெறுகிறார்கள்.
இதுவரை நாங்கள் கண்டிராத அளவிற்கு அவசர சிகிச்சைப் பணியாளர்கள் மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளது என Chris Gibbons கூறியுள்ளார்.