ரஷ்ய தலைநகரை மொத்தமாக புரட்டிப்போட்ட டெல்டா மாறுபாடு
பரவும் வாய்ப்புகள் அதிகம் கொண்ட டெல்டா மாறுபாடு கொரோனா தொற்றால் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்கோவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் 89.3% பேர்களுக்கு டெல்டா மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.
மட்டுமின்றி நாளுக்கு நாள் டெல்டா மாறுபாடால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக நகர மேயர் Sergei Sobyanin எச்சரித்துள்ளார்.
மட்டுமின்றி மாஸ்கோ மக்களில் கண்டுவந்த நோய் எதிர்ப்பு சக்தி நிலை 60%ல் இருந்து 25% என சரிந்துள்ளது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
ரஷ்யாவிலேயே கொரோனா பரவலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நகரம் மாஸ்கோ என கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9,056 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தலைநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த மக்களின் எண்ணிக்கை 1,269,145 என அதிகரித்துள்ளது. இந்த இக்கட்டான நிலையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ள பொதுமக்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளிக்கிழமை முதல், மாஸ்கோ மருத்துவமனைகள் அவசர சிகிச்சையைத் தவிர்த்து, கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே மருத்துவ சேவையை வழங்கத் தொடங்கியுள்ளன.