இவங்க தூரோகிகள்! கண்டிப்பாக ஜெயிக்கனும்: பாகிஸ்தான் அணிக்கு பறந்த உத்தரவு
பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமேஷ் ராஜா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து செய்த துரோகத்திற்கு பழி தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
டாம் லாதம் தலையிலான நியூசிலாந்து அணி சமீபத்தில், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருந்தது.
இதற்காக நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் வந்தது. ஆனால் முதல் ஒருநாள் போட்டி துவங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு திடீரென்று பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடரை ரத்து செய்வதாக கூறியது.
நியூசிலாந்தை தொடர்ந்து, இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்ததால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவரான ரமேஷ் ராஜா, வரும் டி20 உலகக்கோப்பை தொடரில், நாம் இந்தியாவை மட்டுமே பரம எதிரியாக வைத்து தாக்கவிருந்தோம்.
ஆனால் அந்த எண்ணிக்கை தற்போது 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த பட்டியலில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இணைந்துள்ளன. பாகிஸ்தான் வீரர்களே உங்கள் பலத்தை கூட்டிக் கொள்ளுங்கள்.
வெற்றி பெறுவேண்டும் என்ற எண்ணத்தை நன்கு மனதில் பதித்துக்கொள்ளுங்கள். நாம் எந்தவித தவறையும் செய்யவில்லை. ஆனால் அவர்கள் நமக்கு பெரிய துரோகம் செய்துவிட்டனர்.
எனவே அவர்களுக்கு எதிராக எக்காரணத்தை கொண்டும் தோல்வியை பெற்றுவிடக்கூடாது.
இந்தியா உடன் சேர்த்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்தையும் நாம் பழிவாங்கிட வேண்டும் என கூறியுள்ளார்.