பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ 869 கோடி இழப்பு! சமாளிக்க 90 சதவீத ஊதியம் குறைப்பு
சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.869 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி 2025
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தி முடித்தது. ஆனால், இதனால் தங்களுக்கு பாரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
PCBயின் அறிக்கைப்படி அவர்களது முதலீட்டில் 85 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது ரூ.869 கோடி இழப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சந்தித்துள்ளது.
அந்நாட்டு வாரியம் போட்டிக்கு தயாராக ரூ.347 கோடியும், மைதானங்களை தயார் செய்ய ரூ.503 கோடியும் செலவு செய்தது.
இவ்வளவு செலவு செய்தும் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியது. ஒரு போட்டி மழையால் ரத்தானது.
ரூ.52 கோடி மட்டுமே வருவாய்
இதன் காரணமாக ஏனைய போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த தொடர் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.52 கோடி மட்டுமே கிடைத்தது. இவை ஐசிசி தந்த கட்டணம், டிக்கெட், விளம்பரம் ஆகியவை மூலம் கிடைத்தன.
இந்த நிலையில், பாரிய இழப்பை சமாளிக்க, தேசிய டி20 போட்டியில் விளையாடும் வீரர்களின் ஊதியத்தில் 90 சதவீதத்தை குறைத்துள்ளது. இதன்மூலம் ரூ.1 கோடி ஊதியம் பெற்ற ஒரு வீரர் ரூ.10 லட்சம் மட்டுமே பெறுவார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |