IPL தொடரில் இணைந்த முசராபானி - நடவடிக்கை எடுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
PSL தொடரில் இருந்து விலகி IPL தொடரில் இணைந்த முசராபானி மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயாராகி வருகிறது.
KKR அணியில் இணைந்த முசராபானி
2026 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 ஆம் திகதி தொடங்கி நடைபெற உள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்ட நிலையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை(Mustafizur Rahman) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(KKR) அணி ரூ.9.20 கோடிக்கு வாங்கியதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதைத்தொடர்ந்து, முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்குமாறு KKR அணிக்கு BCCI அறிவுறுத்தியதால், முஸ்தஃபிசுர் ரஹ்மான் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதனை கண்டித்து, இந்தியாவில் நடைபெற்ற T20 உலககிண்ண தொடரை வங்கதேசம் புறக்கணித்தது.
A new Blessing in Purple & Gold 💜🔥 pic.twitter.com/p31V3LsGfm
— KolkataKnightRiders (@KKRiders) March 13, 2026
இந்நிலையில், முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு மாற்று வீரராக ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் பிளெசிங் முசராபானியை(Blessing Muzarabani) ஒப்பந்தம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

2026 T20 உலககிண்ண தொடரில் முசராபானி 6 போட்டிகளில் 13 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.
PCB நடவடிக்கை
வரும் மார்ச் 26 ஆம் திகதி பாகிஸ்தானில் PSL தொடர் தொடங்க உள்ள நிலையில், அதில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக பிளெசிங் முசராபானி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
PSL ஒப்பந்தத்தில் இருந்து முசராபானி விலகியதால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயாராகி வருகிறது.

இதே போல், 2025 PSL தொடரில், பெஷாவர் ஸல்மி அணியின் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கார்பின் போஷ், காயமடைந்தவருக்கு மாற்றாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார்.
இதற்காக அவர் ஒரு PSL தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டது. முசராபானி ஐபிஎல் தொடருக்காக PSL தொடரில் இருந்து விலகிய 2வது வீரர் ஆவார்.
IPL தொடரில் இருந்து நீக்கப்பட்ட முஸ்தஃபிசுர் ரஹ்மான், PSL தொடரில் நடப்பு சாம்பியனான லாகூர் கலந்தர்ஸ் அணியால் ரூ.2.12 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |