அவள் அழகாக இருந்தாள்... முகத்தை சிதைத்தேன்: கொடூரனின் பகீர் வாக்குமூலம்
மெக்சிகோ நாட்டில் தொடர் கொலைகள் குறித்து விசாரணையை எதிர்கொள்ளும் முன்னாள் கசாப்பு கடைக்காரனின் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸ் அதிகாரியின் மனைவியை கொலை செய்த வழக்கில் விசாரணை அதிகாரிகளிடம் சிக்கியுள்ள Andrés Mendoza, நான்கு மணி நேரம் நீண்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு பகீர் கிளப்பியுள்ளார்.
72 வயதான மெண்டோசா இதுவரை ஐந்து கொலைகளை ஒப்புக்கொண்டுள்ளார். Reyna González என்ற பெண்மணி மாயமான வழக்கில் மெண்டோசா கைதான நிலையில், பொலிசார் அவரது குடியிருப்பை விரிவான சோதனைக்கு உட்படுத்தினர்.
அதில் Reyna González என்பவரின் சடலத்துடன் மேலும் 9 பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டது. முதற்கட்ட நீதிமன்ற விசாரணையில், தாம் சந்தித்து பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட பெண்களை மட்டுமே கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அதில் ஒருவர் மிக அழகாக இருந்ததாகவும், அதனால் அவர் முகத்தை சிதைத்ததாகவும் மெண்டோசா தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளில் மொத்தம் 30 பெண்களை மெண்டோசா கொன்றிருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
மேலும், தாம் கொலை செய்துள்ள பெண்களின் பெயர்களை குறித்து வைத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.