கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் 3 லட்சம் அபராதம்! எந்த நாட்டில் தெரியுமா?
ஆஸ்திரியாவில் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சுமார் 3 லட்சம் அபராதம் அளிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. கொரோனாவை அழிக்க உலக நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஆஸ்திரியா நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள கட்டாயமாக்கபட்டுள்ளது. பிப்ரவரி 1, 2022 ஆம் ஆண்டுக்குள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் 3,600 யூரோக்கள் (சுமார் ரூ.3 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும்.
அவ்வாறு அபராதம் செலுத்த முடியாதவர்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இதுவரை ஆஸ்திரியாவில் 66% மக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர். தற்போது ஆஸ்திரியா முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக 2 டோஸ்தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் வீட்டுக்கு வெளியே வரக் கூடாது. முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பதோடு வீட்டிலிருந்தே பாடங்களை கற்கும் வசதியை அந்நாட்டு நடைமுறைப்படுத்தியுள்ளது.