சென்னையில் முகக் கவசம் அணியாவிட்டால் இது தான் கதி: மாநகராட்சி அதிரடி அறிவிப்பு
சென்னையில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் நேற்று புதிதாக 4,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 19 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 1520 பேருக்கு தொற்று உறுதியானது. அதேசமயம், தமிழகத்தில் ஏப்ரல் 10ம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. இந்நிலையில், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 200 அபராதமாக விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதேபோல், பொது இடங்களில் எச்சில் துப்பினால் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்.
சலூன்கள், ஜிம்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாவிட்டால் ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும்என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


