உயிரோடு மனிதர்களை இரும்பு பெட்டிக்குள் அடைத்து வைத்து சித்ரவதை! பதறவைக்கும் வீடியோ
சீனாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் இரும்பு பெட்டிக்குள் பூட்டி வைத்து தனிமைப்படுத்தி வருவதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகி வருகின்றது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இரண்டு ஆண்டுகள் கடந்தும் பரவல் குறைந்தபாடில்லை. ஒவ்வொரு வருடமும் புதிய அலைகள் உருமாறி மக்களை தாக்கி வருகின்றது.
சீனாவில் வைரஸின் தொற்று அதிகமாக காணப்பட்டாலும் அந்நாட்டு அரசின் கடும் கட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தது. ஒரு கட்டத்தில் சீனா நாட்டில் கொரோனா தொற்றே இல்லை என்று கூட அறிவித்தது. ஆனால் சீனவில் தற்போது நிலைமை மீண்டும் மோசமாகி வருகின்றது.
Millions of chinese people are living in covid quarantine camps now!
— Songpinganq (@songpinganq) January 9, 2022
2022/1/9 pic.twitter.com/wO1cekQhps
அந்த வகையில் சீன அரசு தனது மக்களுக்கு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை கொரோனா முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் என எந்தவித பாகுபாடும் இன்றி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 15 நாட்கள் வரை வலுக்கட்டாயமாக இரும்பு பெட்டிக்குள் தங்கவைக்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டுள்ளது.
Lockdown in china means you may starve to death.
— Songpinganq (@songpinganq) December 21, 2021
So these people are escaping!
2021.12.21 8pm pic.twitter.com/RAVoFvQ57X
இந்நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.