மனைவி பிள்ளைகளுடன் 250 அடி பள்ளத்தில் காரை செலுத்திய இந்திய வம்சாவளியினர்: பரபரப்புக் காட்சிகள்
இந்திய வம்சாவளியினர் ஒருவர் தன் மனைவி, மற்றும் பிள்ளைகளுடன் தான் பயணித்த காரை 250 அடி பள்ளத்தில் செலுத்திய விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
250 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்
நேற்று மதியம், அமெரிக்காவிலுள்ள Devil's Slide என்னும் இடத்தில், டெஸ்லா கார் ஒன்று பள்ளத்தில் பாய்ந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு விரைந்த பொலிசார், அந்த காரிலிருந்தவர்களின் உடல்களை மீட்பதற்காக ஹெலிகொப்டர் உதவியுடன் மீட்புக் குழுவினர்களை அங்கு அனுப்பியுள்ளார்கள்.
250 அடி பள்ளத்தில் கிடந்த காரை ஹெலிகொப்டரிலிருந்த ஒருவர் கவனிக்கும்போது, அதற்குள் இருந்தவர்கள் அசைவது தெரியவே, அவர்கள் உயிருடன் இருப்பது தெரியவர, அந்த இடம் பரபரப்பாகியுள்ளது.
கயிறு மூலம் கிழே இறங்கிய மீட்புக் குழுவினர், காரில் இருந்த ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுபிள்ளைகளை மீட்டு Holy Cross Medical Center என்னும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் யார் யார்?
விசாரணையில், அந்தக் காரை செலுத்தியவர் தான் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள அதே மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றும் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள Pasadena என்ற இடத்தில் வாழ்ந்துவந்த தர்மேஷ் A. பட்டேல் (41) என்பது தெரியவந்தது.
இந்திய வம்சாவளியினரான தர்மேஷ், தன் மனைவி நேஹா, தங்கள் 7 வயது மகள் மற்றும் 4 வயது மகனுடன் காரில் பயணிக்கும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
அத்துடன், தர்மேஷ் வேண்டுமென்றே காரை பள்ளத்தில் செலுத்தியிருக்கலாம் என சாட்சியங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ள விடயம் கூடுதல் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
This afternoon, deputies responded to a solo vehicle over the side of Hwy 1 south of the Tom Lantos tunnel. Two adults suffered non-life threatening injuries and two children were unharmed. Tremendous collaborative effort btwn SMSO, @CHP_GoldenGate and @calfireSCU pic.twitter.com/sVyKp6LSrc
— San Mateo County S.O (@SMCSheriff) January 3, 2023
ஆகவே, மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் தர்மேஷ் San Mateo County சிறைக்குக் கொண்டு செல்லப்பட உள்ளார். கொலை முயற்சி மற்றும் சிறார் துஷ்பிரயோகம் ஆகியவை செய்ததாக அவர் மீது சந்தேகத்தின் பேரில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து அறிந்த தர்மேஷின் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அந்தக் குடும்பம் ஒரு மகிழ்ச்சியான குடும்பம் என்றும், தம்பதியரிடையே சண்டை எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.