அரிய வகை விலங்குகளை வீட்டில் வளர்த்த நபர்: பொலிசாரிடம் பிடிபட்டதால் எடுத்த விபரீத முடிவு
திருட்டுக் குற்றங்களுக்காக தன்னை பொலிசார் கைது செய்ய வந்துள்ளதை அறிந்த ஒருவர், வித்தியாசமான முறையில், விபரீத முடிவொன்றை எடுத்தார்.
அரிய வகை விலங்குகளை வீட்டில் வளர்த்த நபர்
தென்னாப்பிரிக்காவிலுள்ள Hennenman என்னுமிடத்தைச் சேர்ந்த Marius Joubert (28) என்பவரை திருட்டுக் குற்றங்களுக்காக விசாரிக்கும்படி அவரது வீட்டுக்கு வந்துள்ளனர் பொலிசார்.
Image: AFP/Getty Images
அப்போது அவரது வீட்டை சோதனையிட முயன்ற பொலிசார், அந்த வீட்டுக்குள் 60 விஷப் பாம்புகள், முதலைகள், உடும்புகள், முள்ளெலிகள் முதலான பல அரிய வகை விலங்குகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Image: Facebook
Mariusஐ அவர்கள் கைது செய்ய, கடைசியாக தனது விலங்குகளுக்கு ஒருமுறை உணவளிக்க தன்னை அனுமதிக்குமாறு அவர் கேட்டுள்ளார். ஆகவே, அவரது கைவிலங்கை அவர்கள் அகற்ற, கொடிய விஷப்பாம்புகள் இருந்த கூட்டுக்குள் கையை விட்டுள்ளார் அவர்.
பாம்புகள் அவரைத் தீண்ட, அதைக் கண்ட பொலிசார் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
Image: Copyright Jamie Pyatt News Ltd
பொலிசாரிடம் பிடிபட்டதால் எடுத்த விபரீத முடிவு
விடயம் என்னவென்றால், தனது திருட்டுக் குற்றங்களுடன், அரிய வகை விலங்குகளை வீட்டில் வளர்த்ததற்காக எப்படியும் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் என்பதை நன்கு அறிந்த Marius, வேண்டுமென்றே பாம்புகள் இருந்த கூட்டுக்குள் கையை விட்டு அவற்றிடம் கடிவாங்கியுள்ளார்.
Image: Facebook
இன்னொரு விடயம், அந்த பாம்புகளின் கடிக்கான விஷ முறிவு மருந்துகள் கிடைக்காது என்பதை நன்றாகத் தெரிந்தே அவர் அப்படிச் செய்துள்ளார்.
Image: Facebook
ஆக, சரியான விஷ முறிவு மருந்து இல்லாததால், மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் பலனின்றி உயிரிழந்துவிட்டார் Marius.
அதிகாரிகள், அவரது வீட்டிலிருந்த 70 அரிய வகை விலங்கினங்களை மீட்டு முறையாக காப்பகங்களில் கொண்டு சேர்த்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |