ஒரே வருடத்தில் 39 முறை ஆம்புலன்ஸை அழைத்த நபர்! காரணத்தை கேட்டு அதிர்ந்து போன மருத்துவமனை
தைவானில் ஒருவர் ஒரே வருடத்தில் 39 முறை ஆம்புலன்ஸை அழைத்த சம்பவம் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் நாட்டில் வசித்து வரும் ஒருவர் அவசர மருத்துவ உதவி வேண்டும் என சொல்லி ஆம்புலன்ஸை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அவர் இருக்கும் இடத்தில் இருந்து அவரை மீட்டு செல்லும் ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இறக்கி விட்டுள்ளனர். ஆனால் அந்த நபர் சிகிச்சை பெறாமல் அப்படியே அங்கிருந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதை கவனித்த மருத்துவமனை ஊழியர்கள் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவரது பெயர் வாங்க் என தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட அந்த மருத்துவமனையில் இருந்து அவரது இல்லம் வெறும் 200 மீட்டர் தூரம் என்பதால் இலவச ஆம்புலன்ஸ் சேவையை அவர் தனது தனிப்பட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தி உள்ளார் என அவரை விசாரித்த பொலிஸ் தெரிவித்துள்ளனர்.
மேலும் அடுத்த முறை இப்படி செய்தால் அபராதம் கட்ட வேண்டி இருக்கும் என அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.