ஐந்து வயது சிறுமியால் போர்க்களமான நாடு... சூட்கேஸில் மூட்டையாக வைத்து கடத்தப்பட்டாரா?
இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் இருந்து கடந்த 10 நாட்களாக காணாமல் போன ஐந்து வயது சிறுமியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
140 புலம்பெயர் மக்களுடன்
குறித்த சிறுமி தமது குடும்பத்தினருடன் தங்கியிருந்த ஹொட்டலை பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். பெரு நாட்டவரான 5 வயது Kataleya Mia Chicillo Alvarez என்ற சிறுமி தமது குடும்பம் மற்றும் 140 புலம்பெயர் மக்களுடன் புளோரன்ஸ் நகரில் அமைந்துள்ள Astor ஹொட்டலில் தங்கியிருந்துள்ளார்.
@epa
இந்த நிலையில் ஜூன் 10ம் திகதி திடீரென்று சிறுமி Kataleya மட்டும் மாயமாகியுள்ளார். ஆனால் சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற பொலிசார் கூறிவரும் நிலையில், அதற்கான தடையங்கள் ஏதும் இல்லை என்றே கூறப்படுகிறது.
மேலும், அவ்வாறு சிறுமி கடத்தப்பட்டிருந்தால், அவரை சூட்கேஸில் மூட்டையாக வைத்து எடுத்துச் சென்றிருக்கலாம் என்றே பொலிசார் கூறுகின்றனர். இதனையடுத்து, சிறுமி Kataleya-வை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
@epa
ஞாயிறன்று Astor ஹொட்டலில் தங்கியிருக்கும் அனைவரையும் வெளியேற்றி, தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மட்டுமின்றி, மொத்த ஹொட்டல் வளாகத்தையும் பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.
இத்தாலிய மக்கள் பலர்
சிறுமி Kataleya-வுக்கு 6 மாதமானபோது அவரது குடும்பம் பெருவில் இருந்து இத்தாலியில் புலம்பெயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்தே Astor ஹொட்டலில் ஒரு அறையில் இந்த குடும்பம் தங்கி வருகிறது.
@epa
சனிக்கிழமை பொலிசார் முன்னெடுத்த தீவிர சோதனையில், Astor ஹொட்டலில் சட்டவிரோதமாக 140 பேர்கள் தங்கியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனிடையே, சிறுமி Kataleya-வை மீட்கும் நோக்கில் இத்தாலிய மக்கள் பலர் தாமாகவே களமிறங்கியுள்ளனர்.
சிறுமி மாயமான விவகாரம் புளோரன்ஸ் நகர மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது. பெரு நாட்டில் இருந்தும் பலர் சிறுமி தொடர்பில் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
PressPhoto
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |