இலங்கையர் கொலையை நியாயப்படுத்திய பாகிஸ்தான் அமைச்சர்! சொன்ன காரணம்: வெளியான வீடியோ
பாகிஸ்தானில் இலங்கையர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இதை நியாயப்படுத்தி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் Sialkot நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில், மேலாளராக பணியாற்றி வந்த இலங்கையின் கொழும்புவைச் சேர்ந்த Priyantha diyawadana அங்கிருக்கும் சக ஊழியர்களால் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் இலங்கை மக்களிடையே கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் Priyantha diyawadana மரணத்திற்கு நியாயம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
நாட்டின் பிரதமரான இம்ரான்கான் கண்டிப்பாக குற்றவாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.
The Defence Minister of Pakistan Pervaiz Khattak justifies the murder of #SrilankanManager, Priyantha Kumara who was brutally murdered by a violent mob. Khattak says that kids do such things in passion which doesn't mean things are bad.#Sialkot #Sialkot_incident #Sialkottragedy pic.twitter.com/lWTaYQn8bD
— Hamza Azhar Salam (@HamzaAzhrSalam) December 5, 2021
இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் Pervez Khattak இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், இது மோசமான சம்பவம் என்று சொல்ல முடியாது. உணர்ச்சியில் இது போன்ற செயல்கள் சில நேரங்களில் நடந்துவிடுகிறது என்று கூறி, இந்த சம்பவத்தை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் ஒரு பாதுகாப்பு அமைச்சரி இப்படியா ஒரு பொறுப்பற்று பேசுவது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.