எரிபொருள் விலை ரூ.33 வரை அதிகரிக்க வாய்ப்பு., 11 நாட்களில் ரூ.7.38 வரை உயர்வு
இந்தியாவில் கடந்த 11 நார்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7.38 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியாவின் மூன்று அரசு எண்ணெய் நிறுவனங்களான IOC, BPCL, HPCL இன்னும் பெரிய அளவிற்கு இழப்புகளை சந்தித்து வருகின்றன.
கடந்த மாதங்களில் ஏற்பட்ட இழப்புகளை முழுமையாக ஈடு செய்ய, எரிபொருள் விலை வீட்டாருக்கு ரூ.28 முதல் ரூ.33 வரை கூடுதல் உயர்வு தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதலால் உலக சந்தையில் கச்சா என்னை விலை திடீரென உயர்ந்தது.

இந்தியா தனது தேவையின் 88 சதவீத கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.
விலை அதிகமாக கொடுத்து வாங்கப்பட்ட கச்சா எண்ணெயை சுத்திகரித்து, எரிபொருளை பழைய விலையில் விற்பனை செய்ததால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
சமீபத்திய விலை உயர்வுகள் தினசரி இழப்புகளை குறைத்தாலும், இழப்புகளை முழுமையாக ஈடுசெய்யவில்லை. ஒவ்வொறு 50 பைசா உயர்வும் நிறுவனங்களின் லாபத்தில் 7 முதல் 11 சதவீதம் வரை முன்னேற்றம் தருகிறது.
ஆனால், மக்கள் வாழ்க்கையில் இது பெரும் சுமையாகிறது. எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, காய்கறி, எண்ணெய், அத்தியாவசிய பொருட்களின் விளையும் உயர்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா என்னை விலை சிறிது குறைந்தாலும், நிலைமை இன்னும் உறுதியானதாக இல்லை. எனவே, எதிர்காலத்தில் மேலும் விலை உயர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |