அறிவியலாளர்களுக்கு பணம் கொடுத்து ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி குறித்து பொய்களைப் பரப்பிய போட்டி நிறுவனம்: பரபரப்பு குற்றச்சாட்டு
ஆஸ்ட்ராசெனகா நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பூசி புற்றுநோயை உருவாக்குவதாக கனடாவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அறிவியலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டின் துவக்கத்தில், கனடாவில் நடைபெற்ற மருத்துவர்களுக்கான கருத்தரங்கு ஒன்றில், ஆஸ்ட்ராசெனகா நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பூசி புற்றுநோயை உருவாக்குவதாகவும், அதை நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு கொண்டவர்களுக்கு அளிப்பது பாதுகாப்பானது அல்ல என்றும் சில அறிவியலாளர்களே பேசியிருக்கிறார்கள்.
அந்த கருத்தரங்கில் திரையிடப்பட்ட காட்சிகளில், ஆஸ்ட்ராசெனகா தடுப்பு மருந்து மனிதனுடைய மரபணுவுடன் இணைந்துவிடும் என்றும், அதனால் புற்றுநோய் உருவாகிவிடும் என்பது முதலான கருத்துக்களை விளக்கும் பொய்யான பல விளக்கப்படங்கள் காட்டப்பட்டுள்ளன.
ஆனால், அந்த கருத்தரங்கில் பேசிய அறிவியலாளர்களுக்கு பணம் கொடுத்து ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பச் செய்தது, ஆஸ்ட்ராசெனகாவின் போட்டி நிறுவனமான பைசர் நிறுவனம் என பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள், வரும் வெள்ளிக்கிழமையன்று பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட உள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பைசர் நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர், பைசர் நிறுவனம், அந்த கருத்தரங்கு, கனேடிய மருத்துவர்கள் ஏராளமானோரின் கோரிக்கையின் பேரில் நடத்தப்பட்டதாகவும், மூன்றாம் தரப்பு ஏஜன்சி ஒன்றிற்கு பணம் கொடுத்து, கனடாவில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் குறித்து கற்பிக்கும் ஒரு கருத்தரங்கை நடத்தும்படி பைசர் நிறுவனம் கூற, அந்த ஏஜன்சி இப்படி ஒரு கருத்தை பரப்பிவிட்டதாக தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டு போக, பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் தடுப்பு மருந்து தயாரிப்பதற்கு ஆகும் செலவு 76 பென்னிகள் மட்டுமே என்றும், ஆனால், பைசர் நிறுவனம் அதற்கு 22 பவுண்டுகள் வசூலிப்பதாகவும் மற்றொரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.