ஒமைக்ரானை அழிக்கும் தடுப்பூசி! பிரபல மருந்து நிறுவனம் முக்கிய அறிவிப்பு
Pfizer-BioNTech-ன் 3 டோஸ் தடுப்பூசி ஒமைக்ரான் மாறுபாட்டை அழிப்பதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆய்வக சோதனையில் தங்கள் நிறுவனத்தின் 3 டோஸ் கொரோனா தடுப்பூசியால் புதிய ஒமைக்ரான் மாறுபாட்டை அழிக்க முடியும் என தெரியவந்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஜேர்மனி நிறுவனமான BioNTech மற்றும் அமெரிக்க நிறுவனமான Pfizer கூறியதாவது, இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டால் எதிர்ப்புசக்தி கணிசமாக குறைகிறது.
ஆனால், கடுமையான நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.
இரண்டு டோஸ் தடுப்பூசியால் உருவாகும் எதிர்ப்பு சக்தி கணிசமாக குறையலாம், மேலும் பாதுகாப்பை நீட்டிக்க 3வது டோஸ் தடுப்பூசி தேவை என்று BioNTech தலைமை மருத்துவ அதிகாரி Ozlem Tuereci தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால், மார்ச் 2022ல் ஒமைக்ரான் மாறுபாட்டிற்காக மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை வழங்க முடியும் என்றும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.