ஐரோப்பிய ஒன்றியத்தில் COVID-19 தடுப்பூசிகளின் விலை அதிகரிப்பு!
Pfizer, Moderna நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கும் COVID-19 தடுப்பு மருந்துகளின் விலையை உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் Pfizer, Moderna மருந்து நிறுவனங்களுடன் தடுப்பு மருந்தை வாங்கச் செய்துகொண்ட அண்மை ஒப்பந்தத்தில் விலை அதிகரித்திருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Pfizer தடுப்பு மருந்தின் ஒரு அளவின் (Dose) விலை:
புதிய விலை - 19.50 யூரோ
பழைய விலை - 15.50 யூரோ
Moderna தடுப்பு மருந்தின் ஒரு அளவின் (Dose) விலை:
புதிய விலை - 21.50 யூரோ
பழைய விலை - 19 யூரோ
கொரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்று.
கோடை காலம் முடிவதற்குள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள பெரியவர்களில் 70 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போட ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.
அடுத்த மாத இறுதிக்குள் 1 பில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடத் தேவையான COVID-19 தடுப்பு மருந்தை ஐரோப்பிய ஒன்றியம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.