நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த பயணிகள் கப்பல்! உயிர் பிழைக்க கடலில் குதித்தவர்களில் இருவர் மாயம்
துறைமுகத்தை நெருங்கிக் கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் கப்பல் தீப்பிடித்து விபத்து
கடலில் குதித்தவர்களில் 80க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில் இருவரை தேடும் பணி தொடர்கிறது
பிலிப்பைன்ஸின் கப்பல் கடலில் தீப்பிடித்த விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஓரியண்டல் மிண்டோரோ மாகாணத்தின் கலபன் நகரில் இருந்து 87 பேருடன் கப்பல் ஒன்று துறைமுகத்தை நோக்கி பயணித்தது. அவர்களில் 49 பயணிகள், 38 பணியாளர்கள் ஆவர்.
Philippine Coast Guard
கப்பலானது படங்காஸ் துறைமுகத்தில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் இருந்தபோது, திடீரென தீப்பிடித்தது. இதனால் அச்சமுற்ற பயணிகள் பலர் கடலில் குதித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை மற்றும் தன்னார்வலர்கள் விரைந்து சென்று 80க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர்.
Philippine Coast Guard
ஆனால் இருவர் மாயமானதாகவும், அவர்களை தேடும் பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கப்பலின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Philippine Coast Guard