பிரபல நாட்டில் தங்கம் போல மாறிய முக்கிய உணவு பொருள்! கடுமையான வேதனையில் மக்கள்
பிலிப்பைன்ஸ் நாட்டில் வெங்காயம் என்பது தங்கத்தை போல மிகவும் விலையுயர்ந்த பொருளாக மாறியுள்ளது.
இறைச்சியை விட பல மடங்கு விலை
அதன்படி இறைச்சியை விட வெங்காயம் மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவது அந்நாட்டு மக்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. .
பிலிப்பைன்ஸில் மட்டும் சராசரியாக மாதத்திற்கு சுமார் 17,000 மெட்ரிக் டன் காய்கறிகள் தேவைப்படுகிறது. இந்த நிலையில்தான் மக்களின் முக்கிய காய்கறிகளில் ஒன்றான வெங்காயம் கிலோவுக்கு 600 பிசோஸ் (இந்திய மதிப்பு ரூ 2,588) என்ற விலையில் பிலிப்பைன்ஸில் விற்படுகிறது.
The Manila Times
பதுக்கல்
இது அந்நாட்டில் விற்கப்படும் மாட்டிறைச்சி மற்று பன்றி இறைச்சியை விட மூன்று மடங்கு அதிகம்.
உலகளவில் நிலவும் பணவீக்கம், பதுக்கல், போன்றவை இதற்கு முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.