உலகின் அதிக விஷமுள்ள பாம்புக்கு முத்தம் தந்த பாம்பு மனிதனுக்கு நேர்ந்த கதி! மக்கள் கூட்டத்துக்கு முன்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்
பிலிப்பைன்ஸில் பாம்பு விஷத்தை எதிர்க்கும் நோய் எதிர்க்கும் சக்தி தன் உடலில் இருப்பதாக கூறி வந்த நபர் நாகப்பாம்பு கடித்ததில் உயிரிழந்துள்ளார்.
பாம்பு பிடிப்பதில் வல்லவரான பெர்னார்டோ அல்வேரிஸ் (62) கொடிய விஷ பாம்புகளை மக்கள் கூட்டத்துக்கு முன்னர் பிடித்து வித்தை காட்டும் வேலையை செய்து வந்தார்.
இவர் பலரால் பாம்பு மனிதன் என்றே அழைக்கப்பட்டார். மேலும் பாம்பு விஷத்தை எதிர்க்கும் நோய் எதிர்க்கும் சக்தி தன் உடலில் இருப்பதாகவும் கூறி வந்தார்.
இந்த நிலையில் பெர்னார்டோ சமீபத்தில் மங்கல்டன் பகுதியில் கொடிய விஷம் கொண்ட Northern Philippine cobra என்ற நாகப்பாம்பு வகையை கையில் பிடித்து பொதுமக்கள் முன்னிலையில் தோன்றினார்.
பின்னர் பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்ற போது அவர் நாக்கில் பாம்பு கொத்தியது. அதில் தாங்க முடியாத வலியோடு கத்திய பெர்னார்டோ கீழே சுருண்டு விழுந்தார்.
இதை பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அங்கு மருத்துவர்கள் வந்து பெர்னார்டோ -வை காப்பாற்ற முயன்ற போதும் அவர்களால் முடியவில்லை. அவர் உடல் முழுவதும் பாம்பு விஷம் பரவியதால் உயிரிழந்தார்.
உலகின் மிக கொடிய விஷ பாம்புகளில் ஒன்றாக Philippine cobra கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.