தலிபான் வசமான ஆப்கானிஸ்தானுடன் மீண்டும் விமானச் சேவையை தொடங்கும் முதல் நாடு இது தான்! வெளியான தகவல்
தலிபான் வசமான ஆப்கானிஸ்தானுடன் விமானச் சேவையை தொடங்குவதாக பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ்(PIA) அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 15ம் திகதி தலைநகர் காபூல் உட்பட ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர்.
ஆகஸ்ட் 31ம் திகதியோடு வெளிநாட்டு படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் காபூல் விமான நிலையத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
காபூல் விமான நிலையத்தில் மீண்டும் பழைய படி விமான சேவையை தொடங்க கத்தார் உதவியது.
இதனைத்தொடர்ந்நது, ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு விமானச்சேவை தொடங்கியது.
அதேசமயம், விரைவில் வெளிநாட்டு விமானச் சேவை தொடங்கும் என ஆப்கானிஸ்தானின் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலைியல், அடுத்த வாரம் முதல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதிலிருந்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு விமானச் சேவையை மீண்டும் தொடங்குவதாக பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ்(PIA) அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ்(PIA) செய்தித்தொடர்பாளர் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த மாதம் தாலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு அந்நாட்டுடன் முதல் வெளிநாட்டு வணிக விமானச்சேவையை தொடங்கும் முதல் நாடாக பாகிஸ்தான் திகழ்கிறது.