அமெரிக்காவில் விமானத்துடன் மோதிய ட்ரோன்: விமானியின் தகவலால் ஏற்பட்ட பதற்றம்
அமெரிக்காவில் ட்ரோனுடன் விமானம் ஒன்று மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரோனுடன் மோதிய விமானம்
நியூயார்க்கின் JFK சர்வதேச விமான நிலையத்தில் திங்கட்கிழமை காலை தரையிறங்க வந்து கொண்டிருந்த ஜெட்புளூ (JetBlue) விமானத்தின் மீது ட்ரோன் ஒன்று மோதியதாக கூறப்பட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
லாஸ் வேகாஸில் இருந்து சுமார் 3000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த ஏர்பஸ் ஏ321 விமானத்தின் மீது ட்ரோன் மோதியதாக கூறப்படுகிறது.
ட்ரோன் மோதியது தொடர்பான தகவலை விமானி தரைக் கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்த போது, திருப்பத்தில் விமானத்தின் மீது ட்ரோன் மோதியது என்றும், நேராக காக்பிட் பகுதிக்கு நேர் மேலே அந்த ட்ரோன் மோதியது என்றும் அச்சத்துடன் தெரிவித்துள்ள்ளார்.

இருப்பினும், எந்தவொரு அவசர சேவைகளின் உதவியின்றியும் விமானத்தை பாதுகாப்பாக விமானி தரையிறக்கினார்.
அத்துடன் அதிலிருந்த பயணிகள் அனைவரும் வழக்கமான நடைமுறைகள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
விமானம் தரையிறங்கியதும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், விமானத்தில் எந்தவொரு மோதல் தடயங்களும் சேதங்களும் கண்டறியப்படவில்லை.
இருப்பினும். விமானியின் புகார் தொடர்பில் அமெரிக்காவின் கூட்டாட்சி விமான போக்குவரத்து நிர்வாகம் FAA விசாரணையை தொடங்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |