லண்டன் டெஸ்டில் பரபரப்பு... மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து பேரிஸ்டோவை மோதி தள்ளி அட்டகாசம் ! சிறையில் கம்பி எண்ணும் ஜார்வோ
இங்கிலாந்து-இந்தியா இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் போது பிரிட்டிஷ் யூடியூபர் ஜார்வோ மீண்டும் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து இடையூறு ஏற்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று 3வது நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வந்தது. இந்திய பந்து வீச்சளார் உமேஷ் யாதவ் பந்து வீச தயாராக ஒலி போப் துடுப்பாட , எதிரில் பேரிஸ்டோ இருந்தார்.
இதன் போது திடீரென மைதானத்திற்கு அத்துமீறி நுழைந்த ஜார்வோ, ஒலி போப்-க்கு பந்து வீசுவது போல் ஓடி வந்து பேரிஸ்டோ மீது மோதினார்.
இதனையடுத்து, பாதுகாவலர்கள் அவரை மைதானத்திலிருந்து இழுத்துச்சென்று வெளியேற்றினர்.
பேரிஸ்டோ மீது மோதியதால் தாக்குதலில் ஈடுபட முயன்றதாக சந்தேகத்தின் பேரில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
2வது டெஸ்ட் போட்டியின் போது ஜார்வோ இந்திய ஜெர்சி அணிந்து பீல்டிங் செய்ய மைதானத்திற்கு நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தினார்.
Let him bowl fgs #jarvo69 #jarvo #IndvsEng pic.twitter.com/HiSED9OOVK
— Naman Kumar (@Naman_OFFiCi4L) September 3, 2021
HEADINGLEY மைதானத்தில் நடந்த 3வது டெஸ்டில் ஜார்வோ, கோலிக்கு பதில் இந்திய ஜெர்சி அணிந்த படி களமிறங்கி இடையூறு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, ஜார்வோ வாழ்நாள் முழுவதும் HEADINGLEY மைதானத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.