பிரித்தானியாவில் பிளான் பி நடவடிக்கைகள் நீக்கம்! பிரதமர் போரிஸ் முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவில் தற்போது அமுலில் உள்ள பிளான் பி நடவடிக்கைகள் அடுத்த வாரம் நீக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு முழுவதும் அரசாங்கம் நாட்டை திறந்து வைத்தது என்பதை மீண்டும் வலியுறுத்திய போரிஸ், இந்த அரசாங்கம் மிகவும் கடினமான முடிவுகளை எடுத்துள்ளது என கூறினார்.
சமீபத்திய புள்ளிவிவரங்கள் தேசிய அளவில் ஓமிக்ரான் அலை உச்சத்தை எட்டியிருப்பதைக் காட்டுகின்றன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணி்ககை நிலையாகிவிட்டது, குறிப்பாக லண்டனில் மருத்துவமனையில அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
பிளான் பி கொரோனா நடவடிக்கைகள் அடுத்த வாரம் முடிவுக்கு வந்துவிடும் என்று போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.
கட்டாய கொரோனா பாஸ்கள் இனி தேவைப்படாது, மேலும் மக்கள் முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி வலியுறுத்தப்பட மாட்டார்கள்.
முகக்கவசம் கட்டாயமாக இருக்காது என்றும் பிரதமர் அறிவித்திருக்கிறார்.
நாளை முதல், வகுப்பறைகளில் முகக்கவசம் அணிய தேவையில்லை, மேலும் பொது இடங்களில் முக்கவசம் அணிவதற்கான வழிகாட்டுதல்களும் விரைவில் அகற்றப்படும்.
அதேசமயம், கூட்ட நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை அரசாங்கம் தொடர்ந்து பரிந்துரைக்கும் என்று பிரதமர் கூறினார்.
இருப்பினும், கொரோனா உறுதியான நபர்களுக்கு சுய-தனிமைப்படுத்தல் சட்டப்பூர்வ தேவையாக இருக்கும்.
திங்கட்கிழமை முதல், சுய-தனிமைப்படுத்தல் 5 நாட்களாக குறைக்கப்படும் மற்றும் இரண்டு முறை தொற்று பாதிப்பு இல்லை என சோதனையில் உறுதியாக வேண்டும்.
எதிர்காலத்தில் இது முழுவதுமாக குறையும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.