பிரித்தானியாவிற்கான பிளான் பி நடவடிக்கைகள் இந்த மாதம் ரத்து செய்யப்படுமா? பிரதமர் அளித்த பதில்
பிரித்தானியாவிற்கான பிளான் பி நடவடிக்கைகள் இந்த மாதம் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதில் அளித்துள்ளார்.
பிரித்தானியாவில் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் பிளான் பி நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது.
இதனிடையே, இம்மாத இறுதிக்குள் பிளான் பி நடவடிக்கைகளை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இந்த மாதம் பிரித்தானியாவிற்கான பிளான் பி நடவடிக்கைகளை ரத்து செய்வது குறித்த முடிவை அமைச்சரவை உறுதி செய்திருக்கிறதா என்று பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த போரிஸ் ஜான்சன், கொரோனா பற்றி நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது, சுமார் 16,000 பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் இருக்கிறார்கள்.
தடுப்பூசி போடப்படாதவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பு எட்டு மடங்கு அதிகமாகும்.
எனவே, இந்த கேள்விக்கு உண்மையான பதில் என்னிடம் இல்லை என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.