ஜேர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க திட்டம்; ஏஞ்சலா மெர்கெல் அறிவிப்பு
ஜேர்மனியில் கொரோனா உரடங்கிலிருந்து கட்டுப்பாடுகளைப் படிப்படியாக தளர்த்துவதற்கான திட்டத்தை சான்ஸ்லர் ஏஞ்சலா மெர்கெல் புதன்கிழமையன்று அறிவித்துள்ளார்.
பல மாதங்களாக பொது முடக்கத்தில் இருந்த நிலையில், கட்டுப்பாடுகளை சற்று தளர்த்த பிராந்திய தலைவர்கள் தொடர்ந்து மெர்கெல் இந்த முடிவை எடுத்துள்ளார்.
மெர்கெல், ஜேர்மனியின் 16 பிராந்திய தலைவர்களுடன் 9 மணி நேரத்திற்கும் மேலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான படிப்படியான திட்டத்தை வெளியிட்டார்.
வரும் மார்ச் 8-ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல், ஜேர்மனியர்கள் மேலும் சமூகமயமாக்க அனுமதிக்கப்படுவார்கள். இரண்டு வீடுகளில் இருந்து 5 பெரியவர்கள் வரை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள். சிறு குழந்தைகள் கணக்கிடப்பட மாட்டார்கள்.
சலூன்கள் ஏற்கனவே மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், சில பள்ளிகளும் புத்தகக் கடைகள், பூக்கடைகள் மற்றும் தோட்ட மையங்கள் நாடு முழுவதும் மீண்டும் திறக்கப்படும்.
தளர்வுகள் படிப்படியாக நடக்கும், ஆனால் தற்போது கடைபிடிக்கப்படும் சில முக்கிய கட்டுப்பாடுகள் மார்ச் 28 வரை நீடிக்கும் என்றும் மெர்கெல் அறிவித்துள்ளார். கட்டுப்பாடுகள் 5 நிலைகளில் படிப்படியாக தளர்த்தப்படும் என்றும், ஒவ்வொரு தளர்வுகளும் 14 நாட்கள் இடைவெளியில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்தால், மீண்டும் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 8-ஆம் திகதி, முதல் ஒவ்வொரு வாரமும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் ஒரு ரேப்பிட் கொரோனா சோதனை செய்யப்படும்.
மேலும், விரைவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி வழங்கப்படும் என மெர்கெல் அறிவித்துள்ளார்.