தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்.. பிரபல ஆப்பிரிக்கா நாட்டில் விபத்து
மத்திய ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் தெற்கில் உள்ள Kivu மாகாணத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்து தொடர்பாக மாகாண போக்குவரத்து அமைச்சர் Alimasi Malumbi Mathieu அளித்த தகவலில், ஷபுண்டா நகரத்திலிருந்து 15 கிமீ தொலைவில் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில், இரண்டு விமானக்குழுவினர் மற்றும் ஒரு பயணி உயிரிழந்துள்ளனர், சிலர் உயிர் பிழைத்திருக்கலாம்.
உயிர் பிழைத்தவர்களுக்கு உதவவும், விபத்துக்கான காரணத்தை கண்டறியவும் அவசர சேவைகள் தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன என Mathieu கூறினார்.
விபத்துக்குள்ளான விமானத்தில் மொத்தம் 6 பேர் பயணித்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் எந்த நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது குறித்து தகவல் தற்போது வரை தெளிவாகவில்லை.