அமெரிக்காவில் குடியிருப்பு பகுதி மீது விழுந்த விமானம்: வீடியோ காட்சிகள்
அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விமான விபத்து
மினசோட்டா(Minnesota) புறநகர் பகுதியான புரூக்ளின் பார்க்கில் சனிக்கிழமை அன்று ஒரு அதிர்ச்சிகரமான விமான விபத்து நிகழ்ந்துள்ளது.
ஒரு சிறிய, ஒற்றை எஞ்சின் SOCATA TBM7 ரக விமானம் குடியிருப்பு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியதில், குறைந்தது ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
A small plane crashed into a home in Brooklyn Park Minnesota on Saturday. Nobody was home, however there were no survivors from the plane. It’s unclear how many occupants were in the plane but may god have mercy on them and comfort them. pic.twitter.com/iWuzJgNvhN
— SonnyBoy🇺🇸 (@gotrice2024) March 30, 2025
விமானம் புறப்பட்ட இடம் மற்றும் இலக்கு
அயோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், அனோகா கவுண்டி-பிளெய்ன் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது.
எதிர்பாராதவிதமாக, குடியிருப்பு வீட்டின் மீது மோதியதால், பெரும் தீ விபத்து ஏற்பட்டு வீடு முற்றிலும் நாசமாகியுள்ளது.
இந்த கோர விபத்து சுமார் 82,000 மக்கள் வசிக்கும் புரூக்ளின் பார்க்கில் நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்த இடம், நகரத்திலிருந்து சுமார் 11 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் நிலை
விமானத்தில் பயணம் செய்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
ஆரம்பகட்ட தகவலின்படி, விமானத்தில் பயணம் செய்தவர்களில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் வீட்டின் குடியிருப்பாளர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியதாக புரூக்ளின் பார்க் செய்தித் தொடர்பாளர் ரிசிகட் அடேசாகுன் தெரிவித்துள்ளார்.
#BREAKING: A Socata TBM-700 (N721MB) has crashed into a house in Brooklyn Park, Minnesota, while approaching Anoka-Blaine Airport. The aircraft was en route from Des Moines. The house was empty at the time, and no injuries have been reported inside. Authorities are investigating. pic.twitter.com/y1pA2C4Lin
— Turbine Traveller (@Turbinetraveler) March 29, 2025
விசாரணை மற்றும் நடவடிக்கைகள்
இந்த விமான விபத்து குறித்து பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) அதிகாரிகள் விபத்துக்கான காரணத்தை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |