ஆங்கில கால்வாயில் விழுந்த விமானம்: 2 பயணிகள் நிலை என்ன? தேடுதல் வேட்டை தீவிரம்!
பிரித்தானியாவில் இருந்து வடக்கு பிரான்சில் உள்ள Le Touquet நோக்கி 2 நபர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட The Piper PA-28 ரக விமானம் பிரித்தானிய கடற்பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று சனிக்கிழமை பிரித்தானியாவில் இருந்து இரண்டு நபர்களை ஏற்றிக்கொண்டு வடக்கு பிரான்சில் உள்ள Le Touquet நோக்கி பறந்த The Piper PA-28 ரக விமானம் ஆங்கில கால்வாயில் மோதி விழுந்துள்ளது.
இந்தநிலையில் விபத்துக்குள்ளான விமானம் மற்றும் அதில் பயணம் செய்தவர்களை மீட்கும் பணியில் பிரான்ஸ் நாட்டின் விமானங்கள் மற்றும் படகுகளின் உதவிகளுடன் பிரித்தானிய கடற்பாதுகாப்பு குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.
photo Credit: Alamy
நேற்று இரவு 8:30 மணி நிலவரவப்படி விமானி மற்றும் இரண்டு பயணிகள் குறித்த எந்தவொரு தடையமும் கிடைக்காததால் தேடுதல் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் அவசரகால சேவை அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கையில், விபத்துக் குறித்த எந்தவொரு சரியான காரணமும் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த சிறிய ரக Piper PA-28 விமானம் பொதுவாக லைஃப் ஜாக்கெட்டுகள் மற்றும் அவசர காலங்களில் லைஃப் தெப்பங்கள்(rafts) போன்றவை கொண்டிருக்கும். மேலும் இவை பயிற்சி விமானங்களாகவும், விமான டாக்ஸிகளாகவும் அல்லது தனிப்பட்ட போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய எண்ணெய் கிணறுகள் மேல் குவிந்த போராட்டக்காரர்கள்: அதிரடி கைது நடவடிக்கை!