நாடொன்றின் துணை ஜனாதிபதியுடன் பயணித்த விமானம் மாயம்: தேடும் பணி தீவிரம்
ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா பயணித்த இராணுவ விமானம் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா
திங்களன்று பகல் நடந்த இச்சம்பவத்தில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவே அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்களன்று உள்ளூர் நேரப்படி பகல் 9 மணிக்கு துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா மற்றும் 9 அதிகாரிகளுடன் அந்த இராணுவ விமானம் புறப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னர் ரடாரில் இருந்து தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவத்தை அடுத்து உடனடியான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள பிராந்திய மற்றும் தேசிய படைகளுக்கு ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா உத்தரவிட்டுள்ளார்.
முறைகேடு வழக்கில் சிக்கி கைது
இதனிடையே, பணி நிமித்தம் பஹாமாஸ் புறப்படவிருந்த ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா தமது பயணத்தை ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2022ல் பிரித்தானிய வம்சாவளி மலாவி நாட்டவரான தொழிலதிபருடனான முறைகேடு வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டு சவுலோஸ் சிலிமா தமது அதிகாரத்தை இழந்திருந்தார்.
ஆனால் கடந்த மாதம் நீதிமன்றம் அவர் மீதான ஊழல் வழக்குகளை கைவிட்டது. இதனால் சவுலோஸ் சிலிமா மீண்டும் துணை ஜனாதிபதி பொதுப்புக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |