இங்கிலாந்தில் கடல் மீது பறந்துகொண்டிருந்த விமானம் மாயம்: நீடிக்கும் மர்மம்
இங்கிலாந்தில் நேற்று மதியம் விமானம் ஒன்று கடல் பரப்பின் மேல் பறந்துகொண்டிருக்கும்போது மாயமான நிலையில், இதுவரை அந்த விமானத்துக்கு என்ன நேரிட்டது என்பது மர்மமாகவே நீடிக்கிறது.
இங்கிலாந்தில் மாயமான விமானம்
நேற்று மதியம், இங்கிலாந்திலுள்ள Norfolk என்னுமிடத்துக்கு அருகிலுள்ள Hemsby Gap என்னுமிடத்தில், விமானம் ஒன்று கடல் பரப்பின் மீது பறந்துகொண்டிருந்த நிலையில், 12.34 மணியளவில் அந்த விமானத்தின் விமானி அவசர உதவி கோரி அழைத்துள்ளார்.
அதன்பின் அந்த விமானத்துக்கு என்ன நேரிட்டது என்பது யாருக்கும் தெரியவில்லை.
உடனடியாக, மீட்புப் படகுகளும் ஹெலிகொப்டர் ஒன்றும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.
ஆனால், அந்த விமானத்தை எங்கேயும் காணவில்லை. நான்கு மணி நேர தேடலுக்குப்பின்பும் விமானம் குறித்த எந்த அறிகுறியும் கிடைக்காததால் தேடுதல் பணி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
அந்த விமானம் எங்கிருந்து எங்கு சென்றுகொண்டிருந்தது, அதில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது குறித்த எந்த தகவலும் யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில், அந்த விமானம் கண்ணில் பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவலளிக்குமாறு Hemsby Gap பகுதியில் கடலில் பயணிக்கும் கப்பல்கள் அனைத்திற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |