பேய்கள் நிறைந்த திகிலூட்டும் தீவு! மர்மமான முறையில் மாயமாகும் விமானங்கள்.. மிரள வைக்கும் காரணம்
அமெரிக்காவில் உள்ள தீவு ஒன்றுக்கு செல்லும் விமானங்கள் மாயமாக மறைந்துவிடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் பல்வேறு மர்மமான இடங்கள் உள்ளன. இதற்கான உண்மையான காரணங்கள் குறித்து இன்றுவரை புரியாத புதிராகவே அமைந்துள்ளது. அந்த வகையில் அமெரிக்காவில் அமைந்துள்ள பால்மைரா தீவு பல மர்மங்களை உள்ளடக்கியுள்ளது.
இன்று வரை அங்கு சென்றவர்கள் யாரும் திரும்பி வந்ததில்லை என்று கூறப்படுகிறது. இது போன்ற பல திகிலூட்டும் சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பகுதியில் மக்கள் யாரும் வசிக்கவில்லை. 1798ஆம் ஆண்டு முதல் இன்று வரை நம்ப முடியாத விசித்திர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் அங்கே செல்லும் கப்பல், விமானங்கள் மர்மமான முறையில் மறைந்து விடுகின்றன.
ஆனால் இதற்கான காரணம் குறித்து யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு சிலர் இந்த தீவில் பேய்கள் இருப்பதாக நம்புகின்றனர். இரும்பினும் சில மக்கள் துணிச்சலாக சென்று உயிருடன் திரும்பி வந்துள்ளனர்.
ஆனால் அவர்களும் இந்த தீவில் எதோ விசித்திர சம்பவங்கள் நடப்பதாகவும் அவை அங்கு செல்பவர்களை அச்சுறுத்துவதாக தெரிவித்துள்ளனர். மேலும் சில ஆய்வாளர்கள் இந்த தீவில் மறைந்துள்ள மர்மங்கள் குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் உள்ளனர்.