Fifa உலகக் கிண்ணம்: வாயை மூடியதற்காக வெளியேற்றப்பட்ட முதல் வீரர்
எதிரணி வீரரிடம் பேசும்போது வாயை மறைத்ததற்காக பராகுவேயின் மிகுவல் அல்மிரானுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு இந்த உலகக் கிண்ணத்தில் முதல் வீரராக வெளியேற்றப்பட்டுள்ளார்.
வாயை மறைத்து
சான் பிரான்சிஸ்கோவில் துருக்கிக்கு எதிராக பராகுவே அணி விளையாடிய உலகக் கிண்ணம் குழு நிலை ஆட்டத்தின் போது, இந்தத் தொடரிலேயே முதல் முறையாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டுள்ளது.

32 வயதான அல்மிரான், துருக்கியைச் சேர்ந்த மெர்ட் முல்டூரிடம் பேசும்போது தனது கையால் வாயை மறைத்துக்கொண்டார்; முல்டூர் உடனடியாக அருகில் நின்றிருந்த அதிகாரியிடம் அதைத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் உடனடியாக வீடியோ அசிஸ்டண்ட் ரெஃப்ரி (VAR) மூலம் சரிபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, எல் சால்வடாரைச் சேர்ந்த நடுவர் இவான் பார்டன், நியூகாஸில் யுனைடெட் அணியின் முன்னாள் விங்கரை (winger) வெளியேற்றுவதாகப் பார்வையாளர்களிடம் அறிவித்தார்.
பராகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தபோது, பாதி நேரத்திற்கு சற்று முன்பு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இச்சம்பவம் தொடர்பில் அயர்லாந்து அணியின் முன்னாள் முன்கள வீரரான கிளின்டன் மோரிசன் கூறுகையில்,
விதிகள் தெரிந்திருந்தால், அதைச் செய்யக்கூடாது. அந்த முடிவை எடுத்ததற்காக நடுவர் மற்றும் VAR ஆகியோரைப் பாராட்ட வேண்டும் என்றார். எல்லோரும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்; ஆனால் விதிகள் அப்படித்தான் என்றால், நீங்கள் அந்த விதிகளைப் பின்பற்றத்தான் வேண்டும் என கிளின்டன் மோரிசன் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்டத்தின் பாதிக்கும் மேற்பட்ட நேரம் அல்மிரான் இல்லாமலேயே, பராகுவே அணி துருக்கியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டது. வெள்ளிக்கிழமை நடைபெறும் தங்கள் கடைசி குரூப் ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தினால், பராகுவே அணி 'கடைசி 32' சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள்.
இனவெறித் தாக்குதல்
அல்மிரான் வெளியேற்றப்பட காரணமான புதிய விதியானது உலகக் கிண்ணம் தொடரில் முதல் முறையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. சிவப்பு அட்டை வழங்குவதற்கு முன் அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ளும் நடுவரின் முழுமையான விருப்புரிமைக்கே இந்த முடிவு உட்பட்டது.

கடந்த பிப்ரவரியில் சேம்பியன்ஸ் லீக் ஆட்டம் ஒன்றின்போது, பென்ஃபிகா அணியின் விங்கர் ஜியான்லூகா பிரெஸ்டியானி, ரியல் மாட்ரிட் அணியின் வினிசியஸ் ஜூனியரிடம் பேசிக்கொண்டிருந்த வேளையில் தனது சட்டையை உயர்த்தி வாயை மூடியதால், வீரர்கள் தங்கள் வாயை மூடிக்கொள்ளும் விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
அர்ஜென்டினா சர்வதேச வீரரான அவர், இனவெறித் தாக்குதல் குற்றச்சாட்டில் சிக்கினார் - அதை அவர் மறுத்தார் - மேலும் ஒரு போட்டியில் விளையாட தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டார்.

Uefa விசாரணையைத் தொடர்ந்து, பிரெஸ்டியானி இனவெறிக்குப் பதிலாக ஓரினச்சேர்க்கையாளர் வெறுப்பு நடத்தையில் ஈடுபட்டதாகக் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, ஆறு போட்டிகளில் விளையாடத் தடை செய்யப்பட்டார் - அவற்றில் மூன்று போட்டிகள் இடைநிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |