போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும்! லண்டன் மேயர் வலியுறுத்தல்
பிரித்தானியா பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலக வேண்டும் என லண்டன் மேயர் சாதிக் கான் வலியுறுத்தியுள்ளார்.
ஊரடங்கின் போது டவுனிங் ஸ்ட்ரிட்டில் பார்ட்டி நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தை தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்.
இதுகுறித்து தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லண்டன் மேயர் சாதிக் கான் கூறியதாவது, பார்ட்டி குற்றச்சாட்டுகளை அடுத்து போரிஸ் ஜான்சனின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாததாகிவிட்டது.
இந்த விவகாரத்தில் மேயராக, நான் காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை வழிநடத்தவோ அல்லது சொல்லவோ கூடாது, அவர்கள் செயல்பாட்டில் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.
Sue Gray-யின் அமைச்சரவை அலுவலக விசாரணையில் இருந்து வரும் ஆதாரங்களைப் பார்த்துவிட்டு, அதன் பிறகு பிரதமர் மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்கள் மீது விசாரணை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கமிஷனர் பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார்.
யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை, காவல்துறை ஆதாரங்களை பின்பற்ற வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை, பிரதமர் திமிர்பிடித்தவர் மற்றும் பொய்யர் மட்டுமல்ல, அவரின் போலித்தனத்திற்கும் ஆதாரம் உள்ளது.
பிரதமரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
நாட்டின் நலனுக்காக போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என சாதிக் கான் வலியுறுத்தியுள்ளார்.