பிரான்ஸ், பிரித்தானியா, உக்ரைன் தலைவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
இத்தாலியில் G7 உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தொடர் சந்திப்புகளில் ஈடுபட்டு வருகிறார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் (Emmanuel Macron), பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் (UK Prime Minister Rishi Sunak) மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) ஆகியோரை மோடி இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தார்.
இவர்களைத் தவிர, பல நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத் தலைவர்களுடனான பயனுள்ள கலந்துரையாடல்களின் மூலம் சர்வதேச சவால்களை முறியடிப்பதற்கும், சிறந்த எதிர்காலத்திற்காக சர்வதேச ஒத்துழைப்பை அடைவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி, கல்வி மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி7 மாநாட்டிலும் பிரதமர் மோடி உரையாற்றுவார் எனத் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India, France, United Kingdom, Ukraine, G7 Summit, Narendra Modi, Emmanuel Macron, UK Prime Minister Rishi Sunak, Volodymyr Zelenskyy