போலந்து ஜனாதிபதி தேர்தல் 2025: வாக்குப்பதிவு நிறைவு, முடிவுகள் எப்போது?
போலந்து நாட்டில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
ஐரோப்பிய நாடான போலந்தில் தற்போதைய அதிபர் ஆண்ட்ரெஜ் டுடாவின் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில், நாட்டின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ம் திகதி நிறைவடைந்தது.

துருக்கியில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்திய ரஷ்யா - உக்ரைன்: கைதிகள் பரிமாற்றத்திற்கு ஒப்புதல்!
அதில், ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளரான 53 வயது ரபால் டிர்சாஸ்கோவ்ஸ்கியும், பழமைவாதக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட 42 வயது கரோல் நவ்ரோக்கியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
நேற்று நாடு முழுவதும் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்தனர்.
இந்தத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |