ஜேர்மனியில் தாயை சுட்டுக்கொன்றுவிட்டு பிணைக்கைதிகளை பிடித்துவைத்திருந்த நபர்?: பொலிசார் அதிரடி
ஜேர்மன் நகரமொன்றில் தன் தாயை சுட்டுக்கொன்றுவிட்டு ஷாப்பின் மாலுக்கு வந்தவர்களை ஒருவர் பிணைக்கைதியாக பிடித்துவைத்திருந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஷாப்பிங் மாலில் துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பொதுமக்கள்
இன்று காலை Dresden நகரில் அமைந்துள்ள Altmarktgalerie ஷாப்பிங் மாலில் துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவர் அங்கு சிலரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டதால் அங்கு பொலிசார் குவிக்கப்பட்டார்கள்.
அந்த மாலின் அருகிலேயே கிறிஸ்துமஸ் சந்தை ஒன்று உள்ளதால், ஷாப்பிங் வரும் மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக அந்த சந்தை மூடப்பட்டுள்ளது. மக்கள் யாரும் அங்கு வரவேண்டாம் என பொலிசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அருகிலுள்ள வீடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்
இந்நிலையில், அந்த ஷாப்பிங் மாலுக்கு அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் 62 வயதுடைய பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவர், ஷாப்பிங் மாலில் மக்களை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்திருந்த 40 வயது ஆணின் தாயார் ஆவார். அவரை அவரது மகன் சுட்டுக்கொன்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
முடிவுக்கு வந்த நாடகம்
தற்போது, பொலிசார் அந்த நபரைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைபேசி வாயிலாக அவரிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அவர் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்திருந்த இரண்டு பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்கள்.
Image: Matthias Rietschel/REUTERS