லண்டன் விமானநிலையத்தில் லொரியில் குழந்தைகளுடன் பதுங்கியிருந்த புலம் பெயர்ந்தோர்! வெளியான வீடியோ
பிரித்தானியாவின் விமானநிலையத்தில் இருந்த லொரி ஒன்றில் குழந்தைகள் உட்பட புலம்பெயர்ந்தோர் பலர் பதுங்கியிருந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள Heathrow விமான நிலையத்தில் இருக்கும் லொரி ஒன்றை அதிகாரிகள் பின்புறம் திறந்து பார்த்த போது, அதன் உள்ளே புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் பலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அந்த லொரியின் டிரைவரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இதில் ஒரு குழந்தை உட்பட 13 புலம்பெயர்ந்தோர் குழு இருந்ததாக பொலிசார் ஒருவர் கூறியுள்ளார்.
இதன் வீடியோ காட்சியை பிரபல ஆங்கில ஊடகமான டெய்லிமெயில் வெளியிட்டுள்ளது.
இது குறித்து அங்கிருந்த பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், உண்மையில் இது பார்க்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் குழந்தைகள் இரண்டு முதல் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருந்ததாக கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் சமீபத்திய புள்ளி விவரங்களின் படி இந்த ஆண்டு மட்டும் சுமார் 19,533 புலம்பெயர்ந்தோர் படகு மற்று வேறு வழிகள் மூலம் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், கண்டுபிடிக்கபப்ட்ட இவர்கள் எப்படி விமானநிலையத்தின் உள்ளே இருக்கும் லொரிக்குள் வந்தனர் என்ற விபரம் வெளியாகவில்லை.
அந்த லொரியின் டிரைவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதால், முழு விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.