மன்னர் சார்லசின் பாதுகாவலர்கள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் முறியடிப்பு
மன்னர் சார்லசின் பாதுகாவலர்கள் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சார்லசின் பாதுகாவலர்கள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம்
கடந்த வாரம், Thames Valley பொலிசார், தீவைப்பு மற்றும் ஆயுதம் ஒன்றை வைத்திருப்பதாக சந்தேகத்தின் பேரில் 20 வயது இளைஞர் ஒருவரை கைது செய்தார்கள்.
பின்னர், அந்த நபர் மன்னருடைய பாதுகாவலர்கள் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவலிலிருக்கும் அந்த நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், விண்ட்சர் மாளிகைக்கு அருகில் தங்கியிருக்கும் ராணுவ வீரர்கள், சீருடையில் எங்கும் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டுள்ள நபர் தற்போது தீவிரவாதத் தடுப்பு பொலிசாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுவருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |