பள்ளி மாணவிகள் தான் அவன் குறி! லண்டனில் மர்ம நபர் ஒருவர் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவல்
லண்டனில் தொடர்ச்சியாக பள்ளி மாணவிகள் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் தொடர்பான முக்கிய தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி தென்கிழக்கு லண்டன் கிரீன்விச்சில் 13ல் இருந்து 17 வயதுடைய பள்ளி சிறுமிகள் நால்வர் மீது சமீபகாலமாக அத்துமீறல்கள் அரங்கேறியுள்ளது.
அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி பேருந்தில் இருந்து இறங்கி சென்ற சிறுமியை பின் தொடர்ந்து வந்த நபர் அவர் மீது கை வைத்து தவறாக நடந்து கொண்டார். இதையடுத்து சிறுமி சத்தம் போட்டதால் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார்.
இதே போன்ற சம்பவங்கள் கடந்த 12, 13, 16 திகதிகளிலும் 3 மாணவிகளுக்கு நடந்துள்ளது. இதையடுத்து சம்பவம் நடந்த பகுதிகளில் பொலிசார் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் நபர் ஒருவரின் சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். அவரிடம் இது தொடர்பில் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அனைத்து சம்பவங்களிலும் ஒரு நபரே ஈடுபட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
இதனிடையில், இந்தப் படத்தில் இருக்கும் நபரை நீங்கள் அடையாளம் கண்டுகொண்டால் அல்லது எங்களுக்கு உதவக்கூடிய ஏதேனும் தகவல் இருந்தால், எவ்வளவு சிறியதாக இருந்தாலும், விரைவில் எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் என பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.