கத்தி கூச்சலிட்டார்! லண்டனில் ஒன்றாக இருந்த பெண் மற்றும் ஆண் மீது இனவெறி தாக்குதல்... முக்கிய தகவல்
லண்டனில் இனவெறியை தூண்டும் வகையில் இரண்டு பெண்கள் மற்றும் ஆணிடம் பேசிய நபர் தொடர்பில் முக்கிய தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
வாட்டர்லோ பூங்காவில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி 20களில் உள்ள ஒரு ஆண் மற்றும் பெண் ஒன்றாக நடந்து சென்றனர். அப்போது அவர்களை அணுகிய நபர் ஒருவர் இனவெறியை தூண்டும் வகையில் மோசமாக பேசி கத்தி கூச்சலிட்டார்.
இதன்பிறகு அதே மாதம் 18ஆம் திகதி பெண்ணொருவரை அணுகிய அதே நபர் அவரிடமும் அது போல மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து பொலிசார் இச்செயலில் ஈடுபட்ட நபரை தேடி வந்த நிலையில் விசாரணையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மாதங்கள் உருண்டோடிய நிலையில் தற்போது இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் உள்ள நபரிடம் இரண்டு சம்பவங்கள் குறித்து பேசி விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இந்த இனவெறி தாக்குதல் விசாரணை அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.