நடுரோட்டில் சொந்த பிள்ளைகளை 50,000 ரூபாய்க்கு விற்க முயற்சித்த காவலர்! என்ன காரணம்? வைரலாகும் வீடியோ
பாகிஸ்தானில் பொலிஸ் ஒருவர் தனது குழந்தைகளை 50,000 ரூபாய்க்கு விற்க முயற்சித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தில் வசித்து வருபவர் நிசார் லஷாரி. இவர் சிறையில் காவலராக பணியாற்றி வருகிறார். ஒரு நாள் அவரது மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
இதனால் தனது மகனின் மருத்துவ சிகிச்சைக்காக உயர் அதிகாரிகளிடம் லஷாரி விடுப்பு கேட்டுள்ளார். அப்போது அந்த அதிகாரி விடுப்பு வழங்க வேண்டுமென்றால் லஞ்சம் தர சொல்லி மிரட்டியுள்ளார்.
ஆனால் லஷாரியால் அதிகாரி கேட்ட லஞ்சத்தை வழங்க முடியவில்லை என்ற காரணத்தினால் நகரத்திலிருந்து 120 கிமீ தொலைவில் உள்ள லார்கானாவுக்கு மாற்றப்பட்டார்.
அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, லஞ்சம் கொடுக்காததற்காக எனக்கு ஏன் இந்த தண்டனை கொடுத்தார்கள்? நான் மிகவும் ஏழ்மையாக உள்ளேன். நான் லஞ்சம் கொடுக்க வேண்டுமா அல்லது என் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுக்க வேண்டுமா? என்று தெரிவித்தார்.
گھوٹکی کے پولیس اہلکار کو بچے کے علاج کے لیے چھٹی نہ ملی اور لاڑکانہ تبادلہ کردیا گیا، چھٹی لینے اور تبادلہ رکوانے کے لیے افسران کو پچاس ھزار روپے رشوت دینی پڑے گی، اہلکار پچاس ھزار میں ایک بیٹا بیچنے کی آوازیں لگاتا رہا۔
— Sheikh Sarmad (@ShSarmad71) November 13, 2021
ہائے انسانیت کہاں ہے 😧😮 pic.twitter.com/i9hRF7IsNQ
இதையடுத்து அவர் நடுத்தெருவில் இளைய மகனை தோளில் சுமந்து மற்றொரு மகனை கையில் பிடித்துக் கொண்டும் தனது குழந்தைகளை ரூ.50,000க்கு விற்பனை செய்த வீடியோ இணையத்தில் பரவி வருகின்றது.
இந்நிலையில் இந்த வீடியோ வைரலானதை அடுத்து சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷாவின் கவனத்திற்கு இந்த விஷயம் சென்றதால் அவருக்கு மேலும் 14 நாள் விடுப்பு வழங்கப்பட்டது.