லண்டனில் கிறிஸ்துமஸுக்கு முன் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தக்கூடும்! காவல்துறை எச்சரிக்கை
பிரித்தானியா தலைநகர் லண்டனில் கிறிஸ்துமஸுக்கு முன் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தக்கூடும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
லண்டன் பெருநகர காவல்துறை அணையர் Cressida Dick இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Cressida Dick கூறியதாவது, கிறிஸ்துமஸுக்கு முன் தீவிரவாத தாக்குதல் நடத்த சாத்தியமான அச்சுறுத்தல் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு லண்டன்வாசிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமான நடத்தையைப் புகாரளிக்க பொதுமக்கள் தைரியத்தையும் நம்பிக்கையையும் காட்டுவது முக்கியம். காவல்துறையைத் தொடர்புகொள்வது மக்களின் உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, அவர்களைக் காப்பாற்றும்.
சமீபத்தில் எசெக்ஸில் சர் டேவிட் அமெஸ் எம்.பி.யின் கொடூரமான கொலையின் மூலம் மற்றொரு பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டோம், மேலும் இது பயங்கரவாத அச்சுறுத்தல் மிகவும் உண்மையானது என்பதை நினைவுப்படுத்துகிறது.
எனவே லண்டன்வாசிகள் தொடர்ந்து எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருப்பது மிகவும் முக்கியம்.
சந்தேகத்திற்கிடமான எதையும் நீங்கள் பார்த்தாலோ அல்லது கேட்டாலோ அதை குறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவிக்குமாறு லண்டன் பெருநகர காவல்துறை அணையர் Cressida Dick கேட்டுக்கொண்டுள்ளார்.