உக்ரைனின் ஒரு அங்குல நிலத்தை கூட தரக்கூடாது! போர் களத்தில் கர்ஜித்த பிரபல ஐரோப்பிய நாட்டின் அதிபர்
ரஷ்ய அதிபருக்கு உக்ரைன் அடிபணிய வேண்டும் என்று கவலைக்குரல்கள் கூறுகின்றன என போலாந்து அதிபர் ஆண்ட்ர்செஜ் துடா கூறியுள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் சண்டை தொடரும் நிலையில் போலந்து நாட்டின் அதிபர் ஆண்ட்ர்செஜ் துடா உக்ரைன் சென்றுள்ளார்.
அவர் கீவ் நகரில் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். உக்ரைன் நாடாளுமன்றத்திலும் அவர் உரை ஆற்றினார்.
JAKUB SZYMCZUK/POLISH PRESIDENCY/REUTERS
அப்போது அவர் தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை உக்ரைனுக்கு மட்டுமே உண்டு என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், ரஷ்ய அதிபருக்கு உக்ரைன் அடிபணிய வேண்டும் என்று கவலைக்குரல்கள் கூறுகின்றன.
ஆனால் அந்த குரல்களுக்கு உக்ரைன் செவிசாய்க்கக்கூடாது.
ஏனென்றால் உக்ரைனின் ஒரு அங்குல நிலத்தை விட்டுக்கொடுத்தாலும் அது ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளுக்கு விழுகிற அடியாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
STRINGER/REUTERS